அமிழ்து: January 2008



வாரயிறுதி கவிதைகள்!

Sunday, January 27, 2008



வாரம் தவறாமல்
வரும் சனி ஞாயிறுகளுக்கு
இல்லையா?! - விடுமுறை!

வாரயிறுதி நாட்களில்
பூட்டிடப்படும் எனது வாய்
வணிகத்திற்காக மட்டும் திறந்து கொள்கிறது!

டோக்கனை வாங்கிய சப்பளையரை சுற்றி
எட்டு ஜோடிக் கண்கள் சுழல்கிறது -
என்னுடைய ஒன்றையும் சேர்த்து!

டோக்கனைக் கொடுத்து உணவு பெருவதற்குள்,
ஒவ்வொரு முறையும்
பயம் தொற்றுகிறது-
கொடுக்காமலிருந்து விடுவாரென!

உட்கார்ந்தாலும் நின்றாலும் சாப்பிடுவது
தனியே தானென்பதால்
நின்றபடியே சாப்பிடும் உணவகத்துக்கே
செல்லுகிறேன் காதுகளை மட்டும் கூர்மையாக்கி!

இந்தியாவிலே ஜனத்தொகை
100 கோடிக்கும் மேலாம் - பரவாயில்லை
எனக்கு மட்டும் தொல்லையில்லை!

Labels:

பட்டது போதும்!

Saturday, January 26, 2008
குறைவாயிருக்கும் மின்னொளி,
குளிரூட்டியபடியே யிருக்கும் அறை,
பலவாறாக வந்திருப்பவர்களின் அசாத்திய மெளனம்!
திடீரென கேட்கும் இரைச்சல்,
கூடவே வரும் காலடித் தடம்,
நாசியைத் துளைக்கும் துர் வாசனை,
மூன்று நாளானது விடுங்கள் - நான்
புறப்பட்ட இடத்துக்கே போய்விடுகிறேன்!

Labels: