அமிழ்து: மீண்டும் ஒரு நாள்!



மீண்டும் ஒரு நாள்!



எப்போதும் ஓலமிடும் மின் விசிறி...
எங்கேயோ போகும் விமானத்தின் குரல்...
தலைக்கு மேல் எதையோ இடிக்கும் மேல் வீட்டுக்காரர்...
தூரத்தில் குலைக்கும் நாய்...
பேரிரைச்சலை எழுப்பும் வாகனங்கள்...
எதிர் வீட்டுக் குழந்தையின்
விடாத அழுகுரல்...
குழாயில் ஒழுகும் நீர்...

இருள் கப்பிய வீடு
திறந்ததும், நுழைய முயலும் வெளிச்சம்...
துணிகளை மட்டுமே சுமக்கும் நாற்காலி...
கலைந்தப் படுக்கை...
மலையாய் குவிந்த குப்பைகள்...
விரித்தபடியே இருக்கும் அன்றைய செய்தித்தாள்
கதவைத் தாழிட்டவுடன்
மூச்சு முட்ட வைக்கும் தனிமை...

எதுவும் மாறவில்லை இன்றும்...
மாறி மாறி ஒலிக்கும் சப்தங்களைத் தவிற...
« Home | Next »
| Next »
| Next »
| Next »
| Next »
| Next »
| Next »
| Next »
| Next »
| Next »

1 Comments:

At 10:53 PM, Anonymous Anonymous said...

ammavukku phone adichiduren da :) phothum thane....

 

Post a Comment