அமிழ்து: தமிழக காங்கிரசாரே இப்பாவது புரியுதா



தமிழக காங்கிரசாரே இப்பாவது புரியுதா

சிதம்பரம், தங்கபாலு, ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் எனப் பெரும் தலைகள் தோற்க, வைகோவை எதிர்த்து நின்ற காங்கிரஸ் வேட்பாளர் கூட வெற்றி எனும் போது வாயால் கெட்ட நீங்கள் இனிமேலாவது மக்கள் மனதறிந்து நடந்து கொள்ளுங்கள்!

பாமரனே இங்கு நடப்பதைப் பற்றியெல்லாம் தெரிந்து வைத்துக்கொண்டிருக்கும் போது,இதெல்லாம் தெரியாத நீங்கள் பாராளுமன்றத்தில் போய் என்ன செய்யப் போகிறீர்கள், அதனால் தான் இந்த முறை உங்களுக்கு நகி! :)

இருந்தாலும் நீங்களெல்லாம் பின் வாசல் வழியாக நுழைந்து மந்திரி பதவிக் கூட வாங்கி விடுவீர்கள், ஆனால் அதெல்லாம் மக்கள் ஆதரவில் அல்ல என்பதை மட்டும் புரிந்து கொள்ளுங்கள். அதுவும் ரொம்ப நாட்களுக்கு இல்லை என்பதனையும்!

புது தகவல்: சிதம்பரம் 3354 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டிருகிறார். அதனால் அடிக்கப்பட்டிருக்கிறார். இருந்தாலும் இந்தியாவிலேயே புகழ்பெற்றவர் எந்த அலையும் இல்லாத போதே இழுத்துக்கோ, பறித்துக்கோ என்று வென்றதே அவருக்கு ஒரு பாடம் தான்!

Labels: , , , , , ,

« Home | Next »
| Next »
| Next »
| Next »
| Next »
| Next »
| Next »
| Next »
| Next »
| Next »

12 Comments:

At 1:48 AM, Anonymous Anonymous said...

I'm happy about the congress leader's results.

- Kiri

 
At 1:56 AM, Blogger அமிழ்து - Sathis M R said...

ஆமாம் கிரி, பா.ம.க. வுக்கும் காங்கிரசுக்கும் தக்க பாடம் தந்துள்ளார்கள் தமிழக மக்கள்!

 
At 2:24 AM, Blogger தீப்பெட்டி said...

தமிழக காங்கிரஸ் தலைவர்கள் இன்னும் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்

 
At 2:36 AM, Blogger அமிழ்து - Sathis M R said...

ஆமாம் தீப்பெட்டி, அதற்கு இது ஒரு ஆரம்பமாயிருக்கட்டும்!

 
At 2:59 AM, Blogger குடந்தை அன்புமணி said...

தமிழக மக்கள் தக்க பாடம் தந்துள்ளார்கள்!
இது ஒரு ஆரம்பம் தான்!

 
At 6:47 AM, Blogger Sanjai Gandhi said...

சிதம்பரம் வெற்றி. :))

இன்னொரு காமெடி பதிவு. :)

//வாயால் கெட்ட நீங்கள் இனிமேலாவது மக்கள் மனதறிந்து நடந்து கொள்ளுங்கள்!//

அண்ணே, அவங்க எல்லாம் வாயால கெட்டாங்க சரி.. வைகோ எதால கெட்டாரு? கனேசமூர்த்தி தவிர அவரோட மத்த ஆளுங்க எதால கெட்டாங்க? ராமதாஸ் ஆளுங்க எதால கெட்டாங்க?

போய் முகம் கழுவி ஒரு தூக்கம் போட்டு ஃப்ரஷ் ஆகி வாங்க.. சாவகாசமா பேசலாம்.. :)

 
At 6:52 AM, Blogger Sanjai Gandhi said...

காங்கிரஸ் தலைவர்கள் தோல்விக்கு ஒரு பாடமும் காரணம் இல்ல நண்பர்களே.. கொங்கு மண்டலத்தில் புதிதாக எழுச்சி பெற்று அனைத்துத் தொகுதிகளிலும் சேலம் உட்பட 1 லட்சம் வாக்குகளுக்கு மேல் வாங்கி இருக்கிறார்கள். அவர்களும் முன்வெட்டும் தான் சேலம் முதல் பொள்ளாச்சி மற்றும் கரூர் வரை திமுக , காங்கிரஸ் தோற்க காரணம். ஒன்னுமே தெரியாம நானும் பதிவெழுதறேன்னு உளறிக் கொட்டாதிங்க.

 
At 7:01 AM, Blogger Sanjai Gandhi said...

எழுச்சி பெற்றவர்கள் கொங்கு முன்னேற்றப் பேரவை.

அதை சொல்லாம விட்டிருக்கேன்.

 
At 7:04 AM, Blogger அமிழ்து - Sathis M R said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தம்பி! இந்தப் பதிவு தேர்தல் முடிவு நிறுத்தி வைப்பு, மறு எண்ணிக்கைக்கு எல்லாம் முன்பு எழுதியது. ராமதாஸ் எல்லாம் எப்படிக் கெட்டாருன்னு எல்லாருக்கும் தெரியும்... வைகோ கூட்டணியாலக் கெட்டாரு.

நன்றி தூங்கி முகம் கழுவிட்டு வந்துட்டேன்...சொல்லுங்க!

//ஒன்னுமே தெரியாம நானும் பதிவெழுதறேன்னு உளறிக் கொட்டாதிங்க.//

எதுவுமே சொல்லறதுக்கு முன்னாடி நீங்களே உளறிக் கொட்டாதிங்கனு சொல்றீங்க...எதும் பிரச்சினையா...?

 
At 11:39 PM, Blogger வாக்காளன் said...

too much of comedy..
congress won 9/16

the amma who did the last minute "paasa kaatchigal" on eelam won in 9 out of 23...

the so called eelam god fathers won
1 / 4 and 0/7..

does it all say that eelam played a factor here??


one thing is .. too much of acting (eelam paasam) is dangerous (ADMK, MDMK, PMK) and also too much of anti talks on eelam is also dangerous (EVKS, Thankgabalu, Manisankar Iyer)

 
At 11:45 PM, Blogger அமிழ்து - Sathis M R said...

சரிதான் வாக்காளன்! அப்படித் தான் தெரிகிறது!

 
At 11:51 PM, Blogger Sanjai Gandhi said...

காங்கிரஸ் தலைவர்கள் தோல்வி - ஈழப் பிரச்சனைக் காரணமில்லை : http://thinkcongress.blogspot.com/2009/05/blog-post_17.html


நேரமிருந்தால் இதை படிங்க.

 

Post a Comment